search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே மூதாட்டி அடித்து கொலை- போலீசார் விசாரணை
    X

    சுசீந்திரம் அருகே மூதாட்டி அடித்து கொலை- போலீசார் விசாரணை

    • கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • மூதாட்டி கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே மணி கட்டி பொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவர்களது மகன் கோபி (21) ஜான்சன் இறந்து விட்டதால் தாயாரும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    முத்துலட்சுமி மேலகிருஷ்ணன் புதூர்பகுதியில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தனது மகனிடம் கடன் பிரச்சினை இருப்பதாக கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் முத்துலட்சுமி மணிக்கட்டி பொட்டல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பிணமாக கிடப்பதாக கோபிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோபி சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது தாயார் முத்துலட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

    மேலும் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முத்துலட்சுமியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது மூக்கில் பலத்த காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறினார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×