search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தந்தங்கள்"

    • கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
    • மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதனை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தந்தங்கள் கேரள வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை விற்பனை செய்தவர்கள் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து மோகன்லால், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் விசாரித்து, மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    • பென்னாகரம் வனப்பகுதிகளில் யானைகளின் 4 தந்தங்களை தீவைத்து வனத்துறையினர் அழித்தனர்.
    • உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளை பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் முன்னிலை எரிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானை கூட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக கோடை காலங்களில் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீருக்காக யானைகள் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அதனுடைய பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக பாதுகாக்கபட்டு வந்தது. அதனை தீயிட்டு அழிக்க தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து தற்போது அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் வனத்துறையினர் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பாதுகாக்கபட்டு வந்த யானைகளின் 4 தந்தங்களை நேற்று தீயிட்டு எரித்து அழித்தனர். அப்போது வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பாளர்கள் உடனிருந்தனர்.

    ×