search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிளில் இருந்து"

    • மோட்டார் சைக்களில் இருந்து ஈஸ்வரி தடுமாறி கீழே விழந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    பெருந்துறை:

    பவானி அடுத்த பாண்டி யம்பாளையத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் பெருந்துறை அருகி லுள்ள கள்ளாங்காட்டுபுதூர் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ஈஸ்வரி தன் மகன் கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் பெருந்துறை, அண்ணாசிலை அருகில் மோட்டார் சைக்க ளில் இருந்து ஈஸ்வரி தடு மாறி கீழே விழந்தார்.

    இதில் பலத்த காயம் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (61). விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    இதையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மகுடேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சக்திவேல் ரோட்டில் விழுந்தார்.
    • இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், செங்காளிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று சக்திவேல் காஞ்சிக்கோவிலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு செங்காளி பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிக்கோயில் அடுத்துள்ள எல்.எம்.எஸ். வீதி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

    இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு மயக்கமாக இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×