search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொடக்குறிச்சி"

    • 2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.
    • ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை கிராமம் சின்னியகவுண்டன் வலசில் ஆசிரியர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரத்தின் மங்கை வள்ளி கும்மி குழுவின் 64-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. சின்னியகவுண்டன் வலசில் வண்ண விளக்குகள் நடுவே 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வண்ண உடை அணிந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மங்கை வள்ளி கும்மி குழு கொங்கு பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படுவதால் வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா வெகு விமரிசயைாக நடைபெற்றது.

    ×