search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஸ்திரி"

    • நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி தண்ணீர் பந்தல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி.

    இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, நாமக்கலில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி இவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கராஜ் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 56) கட்டிட மேஸ்திரி. இவரிடம் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை அருகேயுள்ள ரெயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக்கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் தலை துண்டித்த நிலையில் தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது பற்றி சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தங்கராஜ் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×