search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக் சாவு"

    • மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் இன்டூருக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • பால் வேன் ஒன்று அவர் மீது மோதியது.சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் உயிரிழந்தார்.

    இண்டூர்,

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேயுள்ள கழனிகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் மாரிமுத்து (வயது 17). இவர் பெங்களூருவில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    விடுப்பில் ஊருக்கு வந்திருந்த மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் இன்டூருக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    பாறகொட்டாய் என்ற இடத்தருகே மாரிமுத்து சென்றபோது நாகர்கூடலில் இருந்து இண்டூர் நோக்கி வந்த பால் வேன் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்தை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார்.
    • முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சென்னை வளசரவாக்கம் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 44). இவர் படகு மெக்கானிக்காக இருந்து வந்தார். இந்த நிலையில் கடலூர் முதுநகர் உப்பனாற்றில் படகில் சில நாட்களாக தங்கிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார். அப்போது ஷேக் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×