search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் செயின் பறிப்பு"

    சத்துவாச்சாரி அம்மன் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர். நகரில் தண்டு மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் ஒரே வரிசையில் அன்னதானம் வாங்குவதற்காக நின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு நைசாக தப்பி ஓடி விட்டான்.

    நகையை பறிகொடுத்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நகை பறித்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் செயினை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். #chainsnatching
    கோகை:

    கோவை ஒப்பணகார வீதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சாந்தா (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள டெய்லர் கடைக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் சாந்தாவின் அருகில் வந்து இந்தியில் பேசி  முகவரி கேட்டனர். 

    அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சாந்தா இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். #chainsnatching
    ×