search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னோர்களுக்கு தர்ப்பணம்"

    • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வேலூர்:

    இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

    இது போன்ற விரத நாட்களில் முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    அதன்படி ஆடி அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்க ரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    விரதம்

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    ஆடி அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தது.

    மாத தொடக்கத்தில் வந்த அமாவாசை விட, இன்று அமாவாசை தினத்தில் அதிகமானோர் அமாவாசை தினத்தை கடைப்பிடித்து விரதம் இருந்து வழிபட்டனர். அமாவாசையை யொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தருமபுரி,

    ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும்.

    வருடந்தோறும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த வருடம் ஆடி பிறப்பான முதல் நாளான இன்று ஆடி அமாவாசையும் சேர்ந்து வருவதால், பொது–மக்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய குவிந்தனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று தருமபுரி, கிருஷ்ண–கிரி மாவட்டங்களில் நீர் நிலைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கெல–வரப்பள்ளி அணையிலும், போச்சம்பள்ளி அருகேயுள்ள இருமத்தூர், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றிலும் இன்று காலை தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    ஆடிபிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்தனர். காவிரி ஆற்றில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதேபோன்று பென்னாகரம், நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றில் பொது–மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    ஆடி பிறப்பை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது குலத்தெய்வத்திற்கு கோழி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிப்பட்டு வருவது வழக்கம். இதையொட்டி இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குலத்தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதேபோன்று நீர்நிலை–களில் உள்ள கோவில்க–ளுக்கும் சென்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அரூர் அருகே தீர்த்தமலை நீப்பத்துறையில் ஆற்றில் பக்தர்கள் நீராடிவிட்டு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    ஒகேனக்கல்லில் குவிந்த புதுமண தம்பதிகள்

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஆடி அமாவாசை மற்றும் ஆடி பிறப்பை முன்னிட்டு இன்று தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    பொதுமக்களில் சிலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி நீராடிவிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இதேபோன்று ஆடிபிறப்பை யொட்டி புதுமண தம்பதிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து நீராடிவிட்டு அவர்கள் கொண்டு வந்த பூமாலையை ஆற்றில் விட்டு சூரியனை வணங்கினர். மேலும், அங்குள்ள காவிரியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அதிக அளவில் மக்கள் கூட்டம் வரும் என்பதால் ஒகேனக்கல் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    • வேலூரில் தை அமாவாசையொட்டி நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தை அமாவாசை யொட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    தை அமாவாசையொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்க ரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னோர்களின் ஆசை பெறுவதற்கும் பித்ருக்களின் ஆசி பெறுவதற்கும் கோயில்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    போளூர் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் போன்ற இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

    ×