search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் பிரதமர்"

    • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பேசியுள்ளார்
    • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லை - நெட்டிசன்கள்

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என கங்கனா ரனாவத் கூறியதற்கு நேதாஜி குடும்பம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக போஸ் குடும்பத்தை சேர்ந்தவரான சந்திரகுமார் போஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தங்கள் அரசியல் ஆசைக்காக வரலாற்றை சிதைக்க கூடாது. போஸ் ஒரு அரசியல் சிந்தனையாளர், போர் வீரர், அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையுடையவர். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துப் போராடிய ஒரே தலைவர். அத்தகைய தலைவருக்கு நாம் கொடுக்க கூடிய உண்மையான மரியாதை என்பது அவரது சித்தாந்தத்தை பின்பற்றுவது தான்" என்று பதிவிட்டு உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என கூறினார்

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே. டி. ராமாராவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "வடக்கில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தான், இந்தியாவின் முதல் பிரதமர் என்கிறார். தெற்கில் ஒரு பா.ஜ.க தலைவர், மகாத்மா காந்தி தான் முதல் பிரதமர் என்கிறார். இவர்கள் எல்லாம் எங்கு கல்வி கற்றார்கள்?" என்று பதிவிட்டுள்ளார். 

    • நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இன்னும் சிலர், 'கங்கனா பா.ஜ.க தலைவர்களையே விஞ்சிவிடுவார். அந்த அளவுக்கு அவர் புத்திசாலி' என வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றனர்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா, இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

    • தேச விடுதலைக்காக இந்து-முஸ்லீம் ஒற்றுமை அவசியம் என வலியுறுத்தி வந்தார்
    • நவீன இந்தியாவின் சிற்பி என பாராட்டப்பட்டவர் பண்டிட் நேரு

    இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர், பண்டிட் ஜவகர்லால் நேரு.

    1889ல், இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலகட்டத்தில், உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) பகுதியில், மோதிலால் நேருவிற்கும், ஸ்வரூப் ராணி நேருவிற்கும் மகனாக பிறந்தவர் நேரு.

    இங்கிலாந்தில் சட்டக்கல்வி படித்த நேரு, 1912ல் இந்தியாவிற்கு திரும்பினார்.

    1916ல் கமலா கவுல் என்பவரை நேரு மணந்தார். இவர்களின் ஒரே மகள், இந்திரா காந்தி பின்னாளில் இந்திய பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    சிறந்த தேசியவாதியான நேரு, இந்திய விடுதலைக்காக போராடினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவர், வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதிலும், தேச விடுதலைக்காகவும், இரு மதத்தினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    சமகால சுதந்திர போராட்ட தலைவரான 'மகாத்மா' என்றும் 'தேசப்பிதா' என்றும் மக்களால் அழைக்கப்பட்ட மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த நேரு, அவரது அகிம்சை கோட்பாடுகளில் முழு நம்பிக்கை கொண்டவராக இருந்தார். நாட்டின் விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் (non-cooperation movement) உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 வருட காலம் (3052 நாட்கள்) சிறை சென்றவர், நேரு.


    நேரு, தனது பதவி காலத்தில் ராணுவம், வெளியுறவுத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்து திறம்பட கையாண்டவர். 16 வருட காலம் பிரதமராக பதவி வகித்து "இந்தியாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமர்" எனும் பெருமையை பெற்றவர் நேரு.

    "வேற்றுமையில் ஒற்றுமை" (university in diversity) எனும் கோட்பாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்ததாலும், விஞ்ஞானத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்ததாலும், வாழ்நாள் முழுவதும் பழமைவாத சித்தாந்தங்களிலிருந்து விலகி இருந்தார்.

    "நவீன இந்தியாவின் சிற்பி" (architect of modern India) என அழைக்கப்பட்ட நேரு, தொழிற்சாலைகளை அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலைத்திருக்கும் பல தொழிற்சாலைகள் நேருவின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது சட்டையில், பொத்தானுக்கு அருகே தினமும் ஒரு ரோஜா மலரை விரும்பி அணிந்து வரும் பழக்கம் கொண்டிருந்ததால், நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ல் பதவி ஏற்ற நேரு, தனது பதவிக்காலத்திலேயே,1964 மே 27 அன்று மறைந்தார்.


    குழந்தைகள் நலனை மையமாக வைத்தே ஒரு நாட்டின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என நம்பிய நேரு, ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர். அவரது பிறந்த தினமான நவம்பர் 14, ஒவ்வொரு வருடமும் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    ×