search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டைக்கோஸ்"

    • மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
    • கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.

    உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.

    முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது

    ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.

    15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
    • விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    ×