search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கடல் அணை"

    • புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகர் மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து தான் நாகர் மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையை நம்பி தான் உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் பொய்த்துப்போனதால், முக்கடல் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது.

    இதனால் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதம் மழை கொட்டிய போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. முக்கடல் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்தது. 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
    • 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட ராணி தோட்டம் தடி டிப்போ 5-வது குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது முக்கடல் அணை மைனஸ் நிலைக்கு சென்று விட்டது.

    எனவே பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    அதனை ஏற்ற அவர், மறுநாளே தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை பிறப்பித்தார். 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார். அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    நாளை நான் (மேயர்) அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். முக்கடல் அணைக்கு தண்ணீர் வந்ததும், குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு அதன்பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்ப டும்.

    மேலும் ஆழ்துளை கிணறுகள் தூர்வாரப்பட் டுள்ளன. பழுதடைந்த மோட்டார்கள் சரி பார்க் கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்கும் அம்ரூத் திட்டம் மே 31-ந் தேதிக்குள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம். இது தொடர்பாக பொதுப் பணித்துறை, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி உள்ளோம். அவர்களிடம் மே 31-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்தப் பணி முடிவ டைந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்ற நிலை ஏற்படும். ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்படும்.

    முக்கடலுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர் செல்வகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், வேல்முருகன், மாநகர சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், அகஸ்தீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக நாளை தண்ணீர் திறப்பு
    • 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தற்பொழுது தண்ணீர் வினியோகிக்கப் பட்டு வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் மைனஸ் அடியை சென்றதையடுத்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். நாளை (25-ந்தேதி) முதல் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே நாளை முதல் அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு முக்கடல் அணைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாகவும் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்டம் தற்பொழுது நாகர்கோவில் மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 5 சதவீத பணிகளை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முழுமைபெறும் பட்சத்தில் நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடை இன்றி முழுமையாக தண்ணீர் விநியோகிக்க முடியும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்த வரை அணைகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.66 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.95 அடியாக உள்ளது. அவ்வப்போது அணை பகுதிகளில் மழை பெய்து வருவதால் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.

    • குடிநீருக்காக பேச்சிபாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
    • அமைச்சர் துரைமுருகனிடம் மேயர் மகேஷ் கோரிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    தற்பொழுது முக்கடல் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் புத்தன்அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாகர்கோவில் நகரில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சுத்தம் செய்து அதன் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மாநகராட்சி மேயர் மகேஷ் கோரிக்கை வைத்தார்.

    இது தொடர்பாக அரசுக்கு எழுதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உறுதி அளித்தார். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் மகேஷ், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில், நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு குறைவாக உள்ளது. வருடம் தோறும் கோடை காலங்களில் குடிநீருக்காக பேச்சிபாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

    எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் கிடைப்பதற்கு முக்கடல் அணைக்கு பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் துரைமுருகன், இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அணையில் போது மான அளவு தண்ணீர் இல்லாததால் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தன்அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 250 கோடி செலவில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்திற்கு மேலும்ரூ 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுரூ 296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

    எனவே இந்த பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நாகர்கோவில் நகர மக்க ளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அழிவின்போது மண்டல தலைவர் ஜவஹர் திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×