search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகூர்த்த விழா"

    • தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது.
    • 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.



     தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று காலை நடந்தது.

    அப்போது ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்துக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள் வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு வேத மந்திரங்கள்-மேள தாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை- மாலைகளுடன் இணைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கோபுரம் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதையொட்டி ஆயிரம் பொன் சப்பரத் துக்கான தலையாலங்கார பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தல்லாகுளம் மண்டகப்படி சங்க தலைவர் முத்துவிநாயகம், கோவில் துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் ஹாலாஸ்யநாதன், வண்டியூர் தலைமை பட்டர் சங்கரநாராயணன், தேனூர் கிராம கமிட்டி நிர்வாகிகள் சோனைமுத்து, சாமிக்காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் சன்னதி முன்பு கொட்டகை முகூர்த்தம் நடந்தது.

    இதையொட்டி சுந்தர ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மே 3-ந் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். மே 4-ந்தேதி காலை 6 மணிக்கு, மூன்றுமாவடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 5-ந்தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடக்கிறது.

    அப்போது கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

    வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவி லில் இருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாக னத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர், மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். மாலை 2 மணிக்கு கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்படுகிறார்.

    வருகிற 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து கள்ளழகர் பூப்பல் லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.

    • தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.
    • சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இதையொட்டி தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.

    முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாத சிவா ச்சாரியார் தலைமையில் ஸ்தானீகம் ராஜசேகர் குரு க்கள், சின்னசாமி குருக்கள், ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க தலைவர் மதி குருக்கள் தலைமையில் கோபூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசகம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவையொட்டி முருகப்பெருமானின் வேலு க்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தைப்பூச திருத்தேரு க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதை தொடர்ந்து திருவிழா குறித்த தகவல் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    அதன் பின்பு தைப்பூச திருத் தேரோட்டத்தில் ஈடுபட கூடிய தேர் வேலை செய்யும் பணியாளர்கள், வாத்திய குழுவினர், அர்ச்ச கர்கள், ஒதுவார் மூர்த்தி, மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தலைமை குருக்கள் தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரளி மஞ்சள் ஆகிய பொருட்களை பிரசாத மாக வழங்கினார்.

    இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×