search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள் வரத்து அதிகரிப்பு"

    • வேலூர் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்
    • 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு கார்வார் போன்ற இடங்க ளில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகா, கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மீன் வரத்து குறைவாக காணப்பட்டது.

    இதனால் அனைத்து வகை கடல் மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து. இன்று மீன்கள் வரத்து அதிகரித் துள்ளது.

    இதனால் கடந்த வாரத்தை விட விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் ரூ.1,500 வரையும், இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்பனை செய்தனர்.

    சங்கரா ரூ.250-க்கும், கட்லா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சீலா ரூ.300, தேங்காய் பாறை ரூ.400, மத்தி ரூ.140, வவ்வால் ரூ.500 முதல் ரூ.800 வரையும், டேம் வவ்வால் ரூ.150-க்கும், மேல் அரசம் பட்டில் இருந்து வந்த வயல் நண்டு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட் டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதி கரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்ப னைக்கு வந்தன. இங்கு நாளொன்றுக்கு 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் இன்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்தன.

    சிறிய மீன்கள் கிலோ ரூ. 25 வரையும், பெரிய மீன்கள் கிலோ ரூ.50 வரையும் உயர்ந்திருந்தன.

    இன்று மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-750, சீலா பெரியமீன்-600, சிறிய மீன்-300, சங்கரா-350, அயிலை-200, மத்தி-170, முரல்-300, திருக்கை-400, சின்னராட்டு-300, பெரியராட்டு-500, மெல்ல வவ்வால்-700, இறால்-650, சின்ன இறால் - 500, சுறா-600, நண்டு-600.

    இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது . இதனால் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    • இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
    • புரட்டாசி மாதம் முடிவடைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன.

    ஈரோடு:

    புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களில பெரும்பாலானோர் சைவத்துக்கு மாறி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தனர்.இதனால் மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

    மாறாக காய்கறிகளின் தேவை அதிகரித்து காய்கறிகள் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமை நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை நாளான இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக இங்கு வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பொது மக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக 5 டன்கள் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன.

    ஆனால் தற்போது புரட்டாசி மாதம் முடிவ டைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன. இன்று மார்க்கெ ட்டில் 10 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன.

    மக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதன் காரண மாக கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் ரூ.50 மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டன.

    மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-700, ப்ளூநண்டு-600, ராட்டு-650, சின்னராட்டு-500, கடல்பாறை-450, உளி-350, அயிலை-250, சங்கரா-350, திருக்கை-350, பால்சுறா-500, சீலா- 400, மத்தி-180, கருப்புவாவல்-500.

    ×