search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினிலாரி மோதல்"

    ஊத்தங்கரை அருகே சாலையில் நடந்த சென்ற விவசாயி மீது மினிலாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காட்டேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது55). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் காட்டேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. 

    தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக கண்ணாயிரம் அரூர்-ஊத்தங்கரை செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கண்ணாயிரம் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்ட  கண்ணாயிரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங் கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கண்ணாயிரம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சின்னசேலம் அருகே இன்று காலை நடைபயிற்சி சென்ற கூட்டுறவு வங்கி செயலாளர் மீது மினிலாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது57). இவர் சின்னசேலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் நடை பயிற்சிக்கு செல்வார்.

    இன்று காலை வழக்கம் போல் சின்னசேலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுப்பிரமணியன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது.

    அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி மீது மோதியது. அந்த மினிலாரி நிலை தடுமாறி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் மினிலாரி அடியில் சுப்பிரமணியன் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சுப்பிரமணியனுக்கு மனோன்மணி (51) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கிருமாம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற சினிமா தியேட்டர் ஊழியர் மினிலாரி மோதி பலியானார்.

    பாகூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது54). இவர் கடலூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடை பகுதிக்கு வந்திருந்தார்.

    அப்போது சாலையை கடக்க முயன்ற போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக கலியபெருமாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலியபெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×