search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமரங்கள்"

    • பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குடிமங்கலம்:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், சிங்கிரிப்பள்ளி, நெடுசாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பெங்களூரா, நீளம், செந்தூரா, மல்கோவா, பீத்தர், ருமானி, பாங்கனபள்ளி கலாப்பாடு போன்ற மாங்கனிகள் சாகுபடி செய்யப்பட்டு இப்பகுதியில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் வளம் நன்றாக இருப்பதால் இப்பகுதியில் அனைத்து கிராங்களிலும் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

    இன்னும் மூன்று மாதங்களில் அனைத்து மாமரங்களிலும் மாங்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக வரும் நிலையில் தற்போது மா பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாங்காய் விலை அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள மா மரங்களுக்கு மா பூக்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் மாமரங்களை சுத்தம் செய்தல் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை ஓரங்களில் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்து குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மா பூக்கள் கவர்ந்துள்ளது.

    ×