search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானூர்"

    • வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.
    • பண்ணை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம், மானூர் வட்டாரம் வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் 9.86 ஹெக்டேர் பரப்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.

    இப்பண்ணையில் ஆண்டுக்கு சுமார் 55 லட்சம் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகள், சுமார் 3 லட்சம் மா, நெல்லி, சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள் மற்றும் இதர தோட்டக்கலை நடவுச்செடிகள் உற்பத்தி செய்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களுக்கும், அனைத்து தர விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கப் பெற்று வருகிறது. இப்பண்ணையை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

    இங்கு உற்பத்தி செய்யப்படு கிற மா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள், சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், எலுமிச்சை வேர் பிடித்த குச்சிகள் மற்றும் இதர பழச்செடி கள் மற்றும் கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் முறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மாவட்டத்தில் நெல்லி, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்து அதனை மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான விவசாயி களுக்கு திட்டங்கள் மூலம் வழங்குவதற்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது தோட்ட க்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அருண்பிரசாத் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 42). இவர் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கானார்பட்டியில் உள்ள வீட்டில் இவரது தாய் மற்றும் தங்கை வசித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 29-ந்தேதி திருச்சியில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 18).

    இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(26). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அரவிந்தை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு சென்றார்.

    மானூர் பல்லிக்கோட்டை அருகே சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் தேடி வருகின்றனர்.

    ×