search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவியர்கள்"

    • சீர்காழி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான நோய்களைக் கண்டறியும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் வி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டி.என்.சாய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மருத்துவர்கள் எம். ஸ்ரீநாத் , எஸ். பாரத், எஸ்.அருண் குமார், சி.அபிநயா, எம். சுப்பிரமணியம், சிவநேசன் மற்றும் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    டி.ஆர்.பார்த்தசாரதி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாவட்டத்தலைவர் எஸ். சங்கரன், பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் என்.துளசிரங்கன், டி.ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

    நிறைவில் பள்ளி உதவித் தலைமை யாசிரியர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பொன்னிரை, கனந்தங்குடி, வேளூர், வடபாதி ஆற்றங்கரை, மருதவனம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மையங்கள் திறப்பதற்கான இடங்களை மடத்தின் தலைவர் விமூர்த்தானந்த மஹராஜ் பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் திருவாரூர் ராமகிருஷ்ண சேவா சமிதி தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×