search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் படுகாயம்"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஜஸ்வந்த் (வயது 15). இவர் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து அரசு பஸ்ஸில் வந்தார். அப்போது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பஸ் படிகட்டில் இருந்து திடீரென மாணவன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே பெருமாம்பாளையம் காலனியைச் சேர்ந்த மாணவன் நாகராஜன்(16). இவர் கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காம்பவுண்டு சுவரின் மேல் இருந்த கற்கள் மாணவன் நாகராஜன் மீது விழுந்துள்ளது. இதில் மாணவன் படுகாயம் அடைந்தான்.

    இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×