search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாகாபா ஆனந்த்"

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

    இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.



    தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.



    இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

    பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

    மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

    “ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.



    ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.

    கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.

    ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - கவின், இசை - சாம்.சி.எஸ், படத்தொகுப்பு - பவன் ஸ்ரீகுமார், தமிழக வெளியீடு - ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ், தயாரிப்பு - பாலாஜி கப்பா, எழுத்து, இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி.



    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படம் ஹரிஷ் கல்யாணை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன் என்றார்.

    படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunath

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    மாதவ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

    மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூஷா குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாணிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Maaniik
    மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாணிக்’. இதில் இவருக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

    தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மார்டின் இயக்கியுள்ளார். காமெடி கலந்த பேண்டசி படமாக மாணிக் உருவாகி இருக்கிறது. இப்படம் ஜனவரி 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு வி‌ஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
    மாகாபா ஆனந்த், செண்ட்ராயன், நிகிலா விமல் நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் விமர்சனம். #Panjumittai #PanjumittaiReview
    ஊரில் மாகாபா ஆனந்தும், செண்ட்ராயனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மாகாபா ஆனந்திற்கு அதே ஊரில் இருக்கும் நிகிலா விமலுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மனைவி நிகிலாவை சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார். போகும் போது செண்ட்ராயனுக்கு சொல்லாமல் சென்று விடுகிறார்.

    மாகாபா ஆனந்த் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டு, செண்ட்ராயனும் சென்னைக்கு வருகிறார். மாகாபா ஆனந்தின் மனைவி நிகிலாவிற்கு மஞ்சள் கலர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை மாகாபா ஆனந்திடம் சொல்லுகிறார். ஆனால், இவர்களை சந்திக்க செண்ட்ராயன் மஞ்சள் கலரில் துணி அணிந்துக் கொண்டு அவர்கள் வீட்டு வருகிறார்.

    இதைப்பார்த்து மாகாபா ஆனந்த் கடுப்பாகிறார். இவர்கள் வீட்டிலேயே தங்க செண்ட்ராயன் முயற்சிக்கிறார். ஆனால், மாகாபா அவரை வெளியே அனுப்பி விடுகிறார். பின்னர், தன் மனைவி மஞ்சள் கலர் பிடிக்கும் என்று என்னிடம் தான் சொன்னார். அவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமடைகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார்.



    இதனால் சில நாட்கள் மனைவியை பிரிகிறார். பின்னர், சமாதானம் ஆகி, எனக்கு மஞ்சள் கலர் இனிமேல் பிடிக்காது. புளு கலர்தான் பிடிக்கும் என்று மாகாபாவிடம் கூறுகிறார். மறுநாள் செண்டராயன் புளு கலரில் துணி அணிந்து வருகிறார்.

    இந்த விஷயம், செண்ட்ராயனுக்கு மீண்டும் எப்படி தெரிந்தது என்று இவர்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இனிமேல் எனக்கு கலரே பிடிக்காது என்று நிகிலா சொல்ல, கலரே இல்லாமல் வெள்ளை கலரை செண்ட்ராயன் அணிந்து வருகிறார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. 

    இதன் காரணமாக மாகாபா ஆனந்திற்கும், செண்ட்ராயனுக்கும் நட்பு முறிகிறது. இதன் பின், சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் செண்ட்ராயன். 



    இறுதியில் செண்ட்ராயன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மாகாபா ஆனந்த், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பா, மனைவியா என்று குழப்பத்திலும், கோபத்திலும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவராக நடித்திருக்கிறார். செண்ட்ராயனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலராக வருவதும் சரி, பிற்பாதில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சரி நடிப்பால் மனதை கவர்ந்திருக்கிறார். 

    நாயகியாக வரும் நிகிலா விமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். எப்போ பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டு, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனநல மருத்துவராக வரும் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மிளிர்கிறார்.



    குறும்படமாக வெளியான இந்த கதையை, தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன். படத்தின் கடைசி 20 நிமிடம் தவிர படத்தை மற்ற காட்சிகளை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார். மகேஷ் கே தேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பஞ்சுமிட்டாய்’ சுவை குறைவு.
    சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மா.கா.பா.ஆனந்த், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என நினைத்தேன் என்று கூறியிருக்கிறார். #MakapaAnand
    டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்து தனக்கான இடத்தை அடைய போராடிக்கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய் படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    ‘இந்த படம் தமிழுக்கு ஒரு புது முயற்சியாக மாய யதார்த்தம் என்னும் வகையில் எடுக்கப்பட்ட படம். ஆங்கில படங்களை போல மனிதர்களையும் அனிமே‌ஷன்களையும் இணைத்து எழுதப்பட்ட கதை. இந்த படத்துக்கான படப்பிடிப்பை ’கூவம் முதல் திருவண்ணாமலை வரை’ பல சிரமமான சூழ்நிலைகளிலும் இடங்களிலும் தான் எடுத்தோம். பெரும் போராட்டத்துக்கு பின் தான் படம் வெளியாகிறது. ஆனால் ரசிகர்களுக்கு முழு திருப்தியை தரும் படமாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளான புரிதல் சிக்கல்களை பேசுவதால் படம் பார்ப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையை கதையோடு ஒன்றிணைத்துக் கொள்வார்கள். யாரையும் ஏமாற்றாது.

    உங்கள் படங்கள் எல்லாமே வெளியாகும்போது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்குகிறதே?

    இதில் என்னுடைய தவறு எதுவுமே இல்லை. எனக்கு தரப்பட்ட வேலையை சரியாக செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் அந்த படம் அந்த தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். சந்தைபடுத்துதல் அவரின் சூழ்நிலையை பொறுத்து தான் அமைகிறது. இங்கே ஒரு படத்தை எடுப்பதை விட அது சரியாக ரசிகனை சென்று அடைய பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நான் அறிமுக நிலையில் இருப்பதால் இது தொடர்கிறது என நினைக்கிறேன்.



    டிவி, சினிமா இரண்டையும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமா?

    இரண்டிலுமே பயணிக்க தான் ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை இடத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் முயற்சிக்க சொல்கிறார்கள். எனக்கு சினிமா இதுவரை முழுநேர பணியாக மாறவில்லை. டிவிக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். வாய்ப்பு வருகிற படங்களில் நடிக்கிறேன்.

    ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க வைக்க அவர்கள்தான் யோசித்தார்கள். ஆனால் நான் யோசிக்கவில்லை. கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. தயாராக இருக்கிறேன்.
    ×