search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழலையர்கள்"

    • ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேர தூக்கம் அவசியம்.
    • ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

    மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் அன்று காலை வகுப்பில் படித்த பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    40 சிறுவர்களிடம் மாசாசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த தொடர் பரிசோதனை மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாம். குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்த பின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிக்கிறதாம். குழந்தைகளின் நினைவாற்றலை உறுதிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.

    இந்த பரிசோதனையில் பங்கேற்ற குழந்தைகள் தூங்கும்போது, அவர்களின் மூளையில் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயல்படுவதையும் கண்டறிந்தனர். தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை மருத்துவரீதியில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரெபேக்கா ஸ்பென்சர்.

    மழலை வயதில் குழந்தைகள் இயற்கையாகவே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை, பகுத்துப் பார்த்து, சேமித்து வைத்துக் கொள்வதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேர தூக்கம் அவசியம். எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்கிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.

    மதியம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும் எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் சொல்கிறார். மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் பார்த்துக் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மதிய நேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வு முடிவு சொல்கிறது.

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேசப் பள்ளியில் 12-ம் ஆண்டு தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு விழா பள்ளி நடந்தது. தாளாளர் சத்யன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காரைக்குடி தேசிய மாணவர் படை பட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் ரஜனீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    மழலையர்கள் கைகளில் பூக்கள் ததும்பும் மலர் நடனம், உடற்பயிற்சி நடனம், வானவில் தோரண நடனம், மேற்கத்திய நடனம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிர்வாக அதிகாரி பாலாஜி நன்றி கூறினார்.

    ×