search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசியா ஓபன் பேட்மிண்டன்"

    • முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-1, 14-11 என முன்னிலை பெற்றிருந்தனர்.
    • 2-வது செட்டிடில் 6-11 என பின்தங்கிய நிலையில், பின்னர் கைப்பற்றி வெற்றி பெற்றனர்.

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஜோடி பிரான்ஸின் லூகாஸ் கோர்வீ- ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடி 21-11, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் 10-1 என இந்திய ஜோடி முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் பிரான்ஸ் ஜோடி புள்ளிகளை தொடர்ந்து பெற்றதால் 14-11 என முன்னிலை இடைவெளி குறைந்தது. பின்னர் ஒரு புள்ளி கூட விட்டுக்காடுக்காமல் 21-11 என முதல் செட்டை கைப்பற்றியது.

    2-வது செட்டில் பிரான்ஸ் ஜோடி முதலில் 11-6 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடி 21-18 எனக் கைப்பற்றியது.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொண்ணப்பா- தனிஷா கிராஸ்டோ ஜோடி ஜப்பானை ஜோடியை 21-19, 13-21, 21-15 என வீழ்த்தியது.

    கிதாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென் ஆகியொர் தொடக்க சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.

    2024-ம் ஆண்டின் பேட்மிண்டன் உலக பெடரேசனின் முதல் தொடரான மலேசியா ஓபனின் முடிவுகள் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ரேங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
    • முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார்.

    மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

    முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார். இதனையடுத்து நடந்த 2-வது சுற்றை ஸ்ரீகாந்த் 21-18 என தனதாக்கினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 21- 16 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
    • பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.

    ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.

    நாளைய ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய்,லக்ஷயா சென் காப் இறங்குகிறார்கள்.

    ×