search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்கள் வெறிச்செயல்"

    திருவெறும்பூர் அருகே இன்று கட்டிட தொழிலாளியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையத்தை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. 

    இதையடுத்து அவரது உறவினர்கள் ரதீசை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை சந்து பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரதீஷ் இறந்து கிடந்தார். 

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    ரதீசின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதால் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. 

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ரதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு அவரது வீட்டின் அருகே சென்று நின்றதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

    இதனால் கொலையில் உறவினர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரதீசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி அருகே கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புலிவலம்:

    திருச்சி மாவட்டம் புலிவலம் திண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனரோஜா ( 28). இவர்களுக்கு பிரதிக்ஷா (8) என்ற மகளும், கிஷோர் (6) என்ற மகனும் உள்ளனர். 
    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வனரோஜா, குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். ராஜசேகர் திண்ணனூரில் தனியாக வசித்து வந்தார். 

    இந்த நிலையில் இன்று காலை திண்ணனூர் கரட்டாம் பட்டி கூச்சிக்காடு காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக புலிவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். 

    அப்போது அங்கு இறந்து கிடந்தது ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சம்பவ இடத்திற்கு ஜம்பு நாதபுரம் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணனும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×