search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயில் உயிரிழப்பு"

    • வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.
    • சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் லீத் கேஸ்டல் தெருவில் நேற்றிரவு மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.

    உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வேறு பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததா என்று ஆய்வு செய்ய வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு இறந்து போன மயிலை கொண்டு சென்றனர்.

    • மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
    • உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில்/

    திருப்பூர்,

    திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் மீது நின்றிருந்த மயிலானது, பறந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர். இதனிடையே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×