search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகேஷ்"

    • பூங்காவை சீரமைக்க உத்தரவு
    • பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெரு இறுதியில் உள்ள வீட்டின் முன்பக்கம் நீர் உறிஞ்சி குழி அமைக்கவும், கழிவு நீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கவும், பூங்காவிலுள்ள தண்ணீர் தொட்டியை பில்லர் போட்டு வைக்கவும் உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பூங்காவில் மின்விளக்குகள்அமைக்கவும், பூங்கா காம்பவுண்ட் ஓரம் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் அமைக்கவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக நீர் உறிஞ்சி குழி அமைத்து பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள், பரசுராமன் தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் ஒடை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    ×