search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
    மும்பை:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்தது. அது தினமும் 50 காசு அளவுக்கு உயர்ந்து தற்போது ரூ.83.22க்கு அதிகரித்துள்ளது. இதே போல் ஆகஸ்ட் 30-ந்தேதி ரூ.73.43 ஆக இருந்த டீசல் ஒரு லிட்டர் தற்போது ரூ.76.64-க்கும் விற்கப்படுகிறது.


    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    தமிழகத்திலும் நாளை முழு அடைப்பு நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டமும், சென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



    முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிவித்துள்ள இந்த நாடு தழுவிய ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு மகாராஷ்டிராவின் நவ்நிர்மன் சேனா ஆதரவு அளிப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #PetrolDieselPriceHike #BharatBandh
    மும்பையில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் ஏற்படும் விபத்துக்களை கண்டித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து உடைத்தனர். #MumbaiPotholeDeaths
    மும்பை:

    இந்தியாவின் வணிகத்தலைநகரான மும்பையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் முறையான பராமரிப்புகள் இன்றி சமீபகாலங்களில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், விபத்துக்களை தவிர்க்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இருப்பினும் மாநில அரசு துரித நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் கண்டித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த சிலர் நவி மும்பையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #MumbaiPotholeDeaths

    ×