search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் வைத்து வழிபாடு"

    • பொங்கல் வைத்து, பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” எனக்கூவி சூரியனுக்கு பொங்கலை படையல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டனர்.
    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று தைப்பொங்கலை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தங்களது வீடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தருமபுரி,

    தை 1ம் நாளை முன்னிட்டு நேற்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். இதையொட்டி நேற்று காலை, 6 மணிக்கு கிராம மக்கள் வீட்டின் முன்பு வண்ணக்கோலமிட்டு, புதுப் பானைகள், புது அரிசு, வெல்லம், அவரைக் கொட்டை, பூசணிக்காய் சேர்த்து பொங்கல் வைத்து, பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்" எனக்கூவி சூரியனுக்கு பொங்கலை படையல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி நகர மக்கள் புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன்பும், மாடியிலும், புதுப்பானை, கரும்பு, மஞ்சள் வைத்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின்னர் உறவினர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் இருந்த பொதுமக்கள், இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் நேற்று கொண்டாடினர்.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று தைப்பொங்கலை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தங்களது வீடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    புது பானையில் பொங்கல் வைத்து கருப்பு கரும்பு வளர்ந்து தழைத்த கிழங்குடன் கூடிய மஞ்சள், மா இலை தோரணம் கட்டி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • மாகாளயா அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • சுவாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    ஏரியூர்,

    மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஏரியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற முத்தையன் சுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்தையன் சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர்.

    மேலும் அண்டை மாவட்டமான சேலம் மாவட்டத்தின், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து, இந்த ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நேற்று மாகாளயா அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், சுவாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள், தங்களது குழந்தைகளின் எடைக்கு எடை காசு செலுத்தி தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஆடி மாதம் பொங்கல் வைப்பது வழக்கம்

    போளூர்:

    போளூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம தேவதையான துன்ப நாச்சியம்மனுக்கு ஆண்டு தோறும் போளூர் மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

    போளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, என் கே.பாபு, பார்த்திபன், பழனி பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
    • சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கிச்சிப்பாளையம் நடராஜர் பஜனை மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி காளியம்மனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது, அம்மன் உற்சவ மூர்த்திகளை பூசாரிகள் ஸ்ரீதர், சந்தோஷ்குமார் ஆகியோர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர். கண் நோய் வந்து குணமானவர்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்து கின்றனர்.

    நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிக்கின்றனர். பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டி குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகிறர்கள். நாளை தொடங்கி 3 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரி யம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளி யம்மன், களரம்பட்டி புத்து மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்ப்பேட்டை மாநியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் அலகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் கோவில்களில் ஆடிப்ப ண்டிகை கோலாகலமாக நடைபெறுவதால் சேலம் மாநகரமே விழக்கோலம் பூண்டுள்ளது.சேலத்தில் வசிப்பவர்கள் வெளி இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களை அழைத்து விருந்து உபசரித்து மகிழ்கின்றனர். குழந்தைகள் சகிதமாக அவர்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். 

    ×