search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு இன்று பக்தர்கள் விமான அலகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் மீதான பக்தியுடன் அவர்கள் தேச பக்தியையும் உணர்த்தும் விதமாக 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியையும் ஏந்தி வந்தது பிரமிப்பூட்டும் விதமாக இருந்தது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

    • தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
    • சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. கிச்சிப்பாளையம் நடராஜர் பஜனை மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி காளியம்மனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது, அம்மன் உற்சவ மூர்த்திகளை பூசாரிகள் ஸ்ரீதர், சந்தோஷ்குமார் ஆகியோர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    சில பக்தர்கள் நேர்த்திக்க டனாக பொம்மை உரு வங்களை தலை மீது சுமந்து கொண்டு கோயிலை 3 முறை வலம் வந்தனர். கண் நோய் வந்து குணமானவர்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்து கின்றனர்.

    நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிக்கின்றனர். பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டி குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகிறர்கள். நாளை தொடங்கி 3 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரி யம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளி யம்மன், களரம்பட்டி புத்து மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்ப்பேட்டை மாநியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் அலகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் கோவில்களில் ஆடிப்ப ண்டிகை கோலாகலமாக நடைபெறுவதால் சேலம் மாநகரமே விழக்கோலம் பூண்டுள்ளது.சேலத்தில் வசிப்பவர்கள் வெளி இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களை அழைத்து விருந்து உபசரித்து மகிழ்கின்றனர். குழந்தைகள் சகிதமாக அவர்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×