search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்று"

    • ஓராண்டுக்கு பிறகு தனிப்படையினர் பிடித்தனர்
    • 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது சகோதரர் பாபு, அய்யப்பன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரித்து நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன், பாபு, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலையா னார்கள். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு கீழ் கோர்ட் இவர்களுக்கு விதித்த தண்டனையை ஐகோர்டு உறுதி செய்தது. மணிகண்டன், பாபு, அய்யப்பன் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன், பாபு இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமுறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஒரு ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் மனோ கரன் வர வேற்றார். துணைத்த லைவர்ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முறை யாக ஜி.எஸ்.டி. லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றுபெற்று, தொழில் செய்யும் லாரி பாடிகட்டும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் வாங்க, தொழில் வணிகத்துறை மூலம் 125 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும். நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார். கூட்டத்தில் சங்க பொருளாளர் ராமலிங்கம், கவுரிஅம்மன் தியாகராஜன், ஆடிட்டர் ரவி, வக்கீல் கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×