search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை கவர்னர் கிரண்பேடி"

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #BJP #Kiranbedi #Election2018
    ஆலந்தூர்:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.


    இது மோடி, ராகுலுக்கு இடையே இருக்கும் போட்டி அல்ல. முற்றிலும் மக்களுடைய விருப்பம். ஜனநாயகத்தின் வெளிப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Kiranbedi #Election2018
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார். #SabarimalaVerdict #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அங்குள்ள கடைக்காரர்களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் குப்பை கூடை வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு கடைக்காரர்களுக்கு குப்பை கூடைகளை வழங்கினார்.

    இதில், சிவா எம்.எல்.ஏ., மாநில வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-



    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நூற்றாண்டு காலமாக மனிதர்களுக்குள் இருந்த தவறான பிரிவினை நீக்கப்பட்டு உள்ளது.

    ஆண், பெண் இருபாலருக்கு இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    மேலும் தகாத உறவு குற்றம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SabarimalaVerdict #Kiranbedi
    புதுவையில் நீண்ட காலம் வரிபாக்கி வைத்திருப்போர் பட்டியலை புகைப்படத்துடன் ஊடகங்களிலும், துறைகளின் இணையதளங்களிலும் வெளியிட கவர்னர் கிரண்பேடி முடிவு செய்துள்ளார். #GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

    நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசு துறைகளில் நீண்ட காலம் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. நிலுவை வரி பாக்கிகளை வசூலிக்க கவர்னர் கிரண்பேடி அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் முதல் கட்டமாக மின்துறையில் கட்டண பாக்கி வைத்திருப்போர் பட்டியலை கவர்னர் கிரண்பேடி பத்திரிகைகளில் வெளியிட செய்தார். இதையடுத்து கட்டண பாக்கி வைத்துள்ளோர் போட்டி போட்டு கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    மின்துறையின் அதிரடி நடவடிக்கையால் கடந்த 22-ந்தேதி முதல் நாள்தோறும் கட்டணபாக்கி அதிக அளவில் வசூலாகி வருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மின்துறைக்கு ரூ.51 கோடியே 36 லட்சம் கட்டண பாக்கி வசூலாகி உள்ளது.

    இதையடுத்து நிலுவைவரி பாக்கிகளை வசூலிப்பது தொடர்பான அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் ராஜ்நிவாசில் நடந்தது. கூட்டத்தில் மின்வரி, கலால்வரி, வணிகவரி, சொத்துவரி, தொழில்வரி, உள்ளிட்ட வரிகளை வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்ததும் வரிபாக்கி உள்ளவர்களின் சொத்துகளை மின்னனு மூலம் அனைத்து துறைகளும் ஏலம் விட வேண்டும். சட்ட பூர்வமான பரிசீலனைக்கு பிறகு அரசு இதனை செய்ய வேண்டும். வரி கட்டாமல் உள்ளவர்களின் நிலத்தில் ஏலம்விடப்பட போவது குறித்து, அவரது பெயருடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.



    நீண்ட காலம் வரி கட்டாதவர்களின் பெயர்களை ஊடகங்களிலும், துறைகளின் இணையதளங்களிலும் வெளியிட வேண்டும். இணையதளங்களில் வெளியிடும் போது வரி கட்டாதவர்களின் புகைப்படத்தையும் வெளியிட வேண்டும். வணிகவரித்துறை ஆணையர், ஒவ்வொரு மாதமும் சட்டத்துறை செயலரை சந்தித்து, அரசு வழக்கறிஞர் மூலமாக கோர்ட்டில் வழக்குகளை முடிப்பது குறித்து கலந்துரையாட வேண்டும். நிதித்துறை செயலர் 15 நாட்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு கூட்டம் நடத்தி, வரிவசூல் தொடர்பாக நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

    வரிவசூல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அடுத்த மாதம் 26-ந்தேதி ராஜ்நிவாசில் நடக்க உள்ளது. இதில் அதிகாரிகள் வரிவசூல் தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   #GovernorKiranBedi

    ×