search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பொலிவு"

    • வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பேவர்பிளாக் பதிப்பு
    • விரிவாக்கம் பணிகள் தீவிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், நாகர் கோவிலில் சந்திப்பு, டவுன் என 2 ரெயில் நிலை யங்கள் உள்ளன.

    இதில் சந்திப்பு ரெயில் நிலையம் மிக முக்கியமானதாக விளங்கு கிறது. இங்கி ருந்து திருநெல்வேலி, திருவ னந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும், கன்னியாகுமரி செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இது புதிய ரெயில்கள் இயக்கத்திற்கும் தடையாக அமைந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புத்துயிர் பெற தொடங்கியது. அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதல் கட்டமாக செய்யப்பட்டன. மேலும் நாகர்கோவில் சந்திப்பில் ஏற்படும் இட நெருக்கடி பிரச்சி னையை தீர்க்க, திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி, சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்றவை சந்திப்பு ரெயில் நிலையம் வராமல், நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக செல்லும் வகையில் மாற்றப்பட்டது.

    இது தவிர நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரெயில், கோட்டயம் பகுதிகளுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்கிறது. விரைவில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், சந்திப்பு ரெயில் நிலையம் வராமல் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளது. முக்கிய ரெயில்கள் டவுன் நிலையத்தில் நின்று செல்வதால், பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு முன்பதிவு மையம், பயணிகள் தங்கும் அறை, சிக்னல் மையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து டவுன் நிலை யத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையம் வரும் பயணிகள், தங்கள் வாக னங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய வாசலில் பிரமாண்ட நுழைவு வரில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அளவீடு பணிகள் முடிந்துள்ளன.

    மேலும் நடைமேடையில் ஒரு சில இடங்களில் மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளால் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் புதுப்பொலிவை பெற்று வருகிறது.

    • மருத்துவமனை புதுப்பொலிவுக்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்களில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு வெளிநோயாளிகள் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு உள்பட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன.

    கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ரத்த வங்கி, பிணவறைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதே நேரத்தில் இங்கு உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் எழுப்பும் பணி இரவு பகலாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. அங்கு தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு, இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொலிவு பெற்று வருகிறது
    • பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்தபோதிலும் அதில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தனிப்பெருமை உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் தென்னக ரெயில்வேயின் தலைமையிடமாக திகழ்ந்த திருச்சி ரெயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. வட, தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சந்திப்பு பகுதியாக தற்போது வரை இருந்து வருகிறது.

    சாலை போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அரசு அளித்தபோதிலும், ரெயில் போக்குவரத்திற்கு உள்ள மவுசு சற்றும் குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அதேபோல் 80 ஆயிரம் பயணிகள் நாள்தோறும் கடந்து செல்கின்றார்கள்.

    வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருச்சி ரெயில் நிலையத்தை பழமை மாறாமல் நவீனப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள பணிகளில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அதிக பயணிகளை கையாளும் வகையில், ெரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே புதிதாக ரூ.3.15 கோடி செலவில் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இதன் மூலம் டிக்கெட் கவுண்டரில் பயண சீட்டை வாங்கிக்கொண்டு அதன் பின்பகுதிக்கு வந்தால் இப்புதிய நுழைவு வாயிலை அடைய முடியும். இங்கு ஒரே நேரத்தில் 80 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேக்டர்) மூலம் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களுக்கும் எளிதாக செல்ல முடியும். இது வயது முதிர்ந்தோர்கள் சிரமமின்றி அனைத்து நடைமேடைகளுக்கும் செல்ல ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல தற்போதைய கல்லுக்குழி செல்லும் நுழைவுவாயிலுக்கு மாற்றாக புதிதாக ஏற்படுத்தபட்டுள்ள 8-வது நடைமேடை வழியாக ெரயில் நிலையத்துக்குள் நுழையும் வகையில் பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இது தவிர ெரயில் நிலைய வளாகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், 400 கார்கள் வரை நிறுத்துவதற்கான இட வசதியும் மேம்படுத்தபட்டுள்ளன.

    இது குறித்து திருச்சி கோட்ட வணிகப்பிரிவு முதுநிலை மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், ெரயில் நிலையத்தில் 2-வது நுழைவு வாயில் முதல் 8-வது நடைமேடை வரையில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதியுடன் இணைக்கப்பட்ட எஸ்கலேட்டர் வசதி ரூ.10.60 கோடி செலவில் 6 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர விமான நிலையத்தில் உள்ளது போலவே அனைத்து வசதிகளும் அடங்கிய நவீன பார்சல் பிரிவு, லிப்ட் வசதிகள், அதிநவீன கழிவறைகள், 3 பெரிய ஓட்டல்கள், 14 சிறிய சிற்றுண்டியகங்கள், வாடகை இ-பைக் வசதிக்கான மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்,

    நவீன கட்டுப்பாடு அறைகள், அதிநவீன அவசர சிகிச்சை மையம், 5 இடங்களில் ஏடிஎம் மிஷின்கள், செல்பி பாயின்ட, சுற்றுலாத்தகவல் மையம், ஒரே நேரத்தில் 800 பயணிகள் அமரும் வகையில் நவீன இருக்கை வசதிகள், குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாத பயணிகள் காத்திருப்பு அறை வசதிகள் என அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

    2-வது நுழைவு வாயில், கல்லுக்குழி நுழைவு வாயில், எஸ்கலேட்டர் என அனைத்து பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. வரும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த அனைத்து நவீன வசதிகளும், பயணிகளுக்கு கிடைக்கும் என்றார்.

    இந்த நவீன வசதிகள் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான கட்டணம், நிறைவான பயணத்தை விரும்பும் சாமானியர்களிடம் இந்த வசதிகள் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    ×