search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் கடத்தல்"

    • வீட்டில் இருந்த புதுப்பெண் திடீரென மாயமானார்.
    • அதிச்சி அடைந்த கணவர் மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூைர சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது23). இவர் வேடசந்தூர் பகுதியில்உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சங்கீதா வுக்கும் பாலாதோட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண த்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் மறு வீட்டுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென மாயமானார். இதனால் அதிச்சி அடைந்த பாண்டி த்துரை மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அந்த புகாரில் எரிேயாடு பாகாநத்தம் புதூரை சேர்ந்த மில்வேன் டிரைவர் மனோஜ்குமார் (19) என்பவர் தனது மகளை கடத்தி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    • வத்திராயிருப்பு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தப்படடார்.
    • இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள லட்சுமியாபுரம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் ராஜஸ்வரன் (வயது28). இவரும், டி.மானகசேரியை சேர்ந்த சேது மகள் நாகராணி என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி ராஜேஸ்வரன், நாகராணி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி மூவரைவென்றானில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் திரும ணத்தை பதிவு செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் 2 பேரும் லட்சுமியாபுரத்தில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராணியின் சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டு தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து நாகராணி தனது கணவருடன் தாயாரை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தாயை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக கூறி நாக ராணியை மட்டும் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ராஜேஸ்வரனின் வாட்ஸ்-அப்-க்கு நாகராணி அனுப்பிய தகவலில் தன்னை உறவினர்கள் கடத்தி செல்வதாக குறிப் பிட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரன் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமான பெண்ணை காதலன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

    கரூர், பிப்.5-

    கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கார்த்திக் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற 21 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, தேவச்சி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார வாலிபர் சூரியா என்பவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சினேகாவிற்கும் சூரியாவிற்கும் பழனியில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியினர் தேவச்சி கவுண்டன் புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் காதலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்து கார்த்திக் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது அண்ணன் சக்திவேல், மற்றும் குளத்துப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை அழைத்து கொண்டு தேவச்சி கவுண்டன் புதூரில் உள்ள காதலியின் கணவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த தனது காதலியை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது இதனை சூரியாவின் தந்தை பழனிச்சாமி மற்றும் சினேகாவின் தாயார் புஷ்பா மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்றனர், அவர்களை கடத்தல் கும்பல் தாக்கினர். இதில் காயம் அடைந்த பழனிச்சாமி, புஷ்பா ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சினேகா மற்றும் கார்த்திக்கை வலை வீசி தேடிவருகின்றனர். திருமணமான பெண்ணை காதலன் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×