search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள் விற்ற"

    • கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி

    கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியை சேர்ந்த தீபா (34), அளுக்குளி குட்டிமூலை காடு பகுதியை சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் முதல்வீதியை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
    • புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

    மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.

    அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பவானி பஸ் நிலையத்தில் பிஸ்கட் கடையில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

    பவானி:

    பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிஸ்கட், கூல்ட்ரி ங்க்ஸ் கடைகளில் ஹான்ஸ், பான்பராக், கூல்லிப் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையி லை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த சோதனையில் பவானி பஸ் நிலையத்தில் 8 நம்பர் கூல்டிரிங்ஸ், பிஸ்கட் கடையில் முருகேசன் என்பவர் பாக்கெட்டில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இந்த கடைக்கு சீல் வைக்க கோரி பவானி வருவாய் துறைக்கு பவானி போலீசார் கடிதம் அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுபடி வருவாய் துறை ஆய்வாளர் விஜய கோகுல், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

    ×