search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியோ தலைவர்"

    • திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள்.
    • கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான கார்ப்பரேட் இணைப்பு திட்டம் கருத்தரங்கு நடைபெற்றது. வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஸ்ரீ விஜய் வரவேற்றார்.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசியதாவது :- கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை. தற்போது அந்தக் காலச் சூழ்நிலை மாறி நம்முடன் ஒன்றாக இணைந்து பயணிக்க கூடிய நட்பு சூழல் உருவாகியுள்ளது.திருப்பூரில் உள்ள ஆடிட்டர்கள் 24 மணி நேரமும் அவரவர் முதலா ளிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்னர் இருந்ததை காட்டிலும் தற்போது உற்பத்தி தேவை அதிகரித்துள்ளது.

    வருமான வரி துறையினரின் அதிகாரிகள் அனைத்து வகையிலும் உற்பத்தியாளர்களுடன் நல்லுறவை வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் நல்ல ஆதரவை தருகின்றனர். திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாாவது :- வருமான வரித்துறையினர் சில மாற்றங்களை நிச்சயமாக செய்து தர வேண்டும். உள்நாட்டு வர்த்தகம், 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசுக்கும் தொழில்துறையினருக்கும் மிகுந்த நல்லுறவை இது ஏற்படுத்தியுள்ளது. உலக சுற்றுச்சூழல் பசுமை திட்டத்தை நோக்கி திருப்பூர் வேகமாக பயணிக்கிறது.

    தொழில்நுட்ப காரணங்கள் பல்வேறு வகையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்பில் உள்ள டிரேசஸ் டிமாண்ட்களை வட்டி மற்றும் கால தாமத அபராததொகை இல்லாமல் செலுத்துவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து வரும் இன்வாய்ஸ்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் செலவுத் தொகையை உரிமை கோர முடியாத நிலையில் உள்ளது. வரி செலுத்தக்கூடிய சுழற்சி முறை150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை இருப்பதால் ஜி.எஸ்.டி., விதிகளில் இருப்பதை போல 180 நாட்கள் வரை கால அவகாசம் தந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்றார்.

    • 2022-23ம் நிதியாண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
    • ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவியது.

    திருப்பூர் :

    இந்த நிதியாண்டில் நம் நாட்டின் ஏற்றுமதி 55 சதவீ தம் உயர்ந்துள்ளது என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அளவிலான பொருளா தார மந்த நிலையையும் மீறி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2022-23ம் நிதியா ண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 21-22ல் 41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவியது.கடந்த ஆண்டிலிருந்து ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக தீரவில்லை. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் போர் சூழல் குறைந்தபாடில்லை. கடந்த, 2021-22ம் நிதி ஆண்டை காட்டிலும் 22-23ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், 55 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும், 2030ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 164 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

    ஆட்டோமொபைல், இயந்திர ஏற்றுமதி என பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட தமிழ்நாடு ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிப்பது வங்கி கணக்கு செயல்பாடு அவகாசம் 90 நாட்கள் என்பதை 180 நாட்களாக உயர்த்தி கொடுப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும்.

    திருப்பூர் :

    பியோ தலைவர் சக்திவேல் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் அவினாசி அருகே இந்தியா நிட்பேர் அசோசியேசன், சார்பில் கண்காட்சி வருகிற 12 முதல் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், இந்திய ஜவுளி பொருட்களையே அதிகம் விரும்பி வாங்குவதாக ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் போட்டி நாடுகளில் பல்வேறு சவால் இருப்பதால், இந்தியாவுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு, பங்களா தேஷில் இருந்து ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்தியா – ஐரோப்பிய நாடுகளுடனான, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம், தீபாவளிக்கு முன்னதாக ஒப்பந்தமாகும். அதற்கு பிறகு, பங்களாதேஷ் ஆர்டர்கள், இந்தியாவுக்கு வந்துவிடும். அடுத்ததாக, கனடாவுடனும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வா ய்ப்புள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. திருப்பூர் தொழில்துறை பயன்பெறும் வகையில், 'மெகா டெக்ஸ்டைல் பார்க்' உள்ளிட்ட திட்டங்களும் அமலுக்கு வரஇருக்கின்றன.

    6 ஆண்டுகளுக்கு பிறகு, 'இந்தியா சர்வதேச நிட்பேர்' பிரமாண்டமாக அமையும். வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினாலும், வெளிநாட்டு வாடிக்கையா ளரின் ஆதரவாலும், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தில், 25 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். சாதகமான சூழலில் நடக்கும் 48 வது 'நிட்பேர்' கண்காட்சி ஏற்றுமதி வர்த்தகத்தின் திருப்புமுனையாக அமையும்; வர்த்தக வாய்ப்பு 5 சதவீதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில், பிரகாசமான எதிர்காலம் உருவாக இருப்பதால், உற்பத்தி திறனை மேம்படுத்தி, ஏற்றுமதியாளர்களும் தங்களை தயார்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

    இதில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×