search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணங்கள்"

    • அடையாளம் தெரியாத பெண் பிணங்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையப்பகுதியில் சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் பெயர் சரசு என்பது மட்டும் தெரியவந்தது. எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் பெரியார் பஸ்நிலையப்பகுதியில் மயங்கிக்கிடந்த 65 வயது மூதாட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர், ஊர் விபரம் தெரியவில்லை. இதுகுறித்து திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
    • சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×