search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத பெண் பிணங்கள்
    X

    அடையாளம் தெரியாத பெண் பிணங்கள்

    • அடையாளம் தெரியாத பெண் பிணங்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையப்பகுதியில் சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் பெயர் சரசு என்பது மட்டும் தெரியவந்தது. எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் பெரியார் பஸ்நிலையப்பகுதியில் மயங்கிக்கிடந்த 65 வயது மூதாட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர், ஊர் விபரம் தெரியவில்லை. இதுகுறித்து திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×