search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி"

    • நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை : 

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.

    கடந்த மாதம் 25ந் தேதி, இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டு 21 நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீர் வழங்கப்பட்ட நிலையில் பாசனம் நிறைவு பெற உள்ளதால் திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற உள்ளதால் பிரதான கால்வாயில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியிலுள்ள ஒரு சில கால்வாய்களுக்கு மூன்று நாட்கள் வரை நீர் வழங்க வேண்டியுள்ளது. அதற்கு பின் முழுமையாக நீர் திறப்பு நிறுத்தப்படும்.

    திருமூர்த்தி அணையில் நீர் சேகரிப்பு , கால்வாய் பராமரிப்பு மற்றும் கால்வாய்களில் மடை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    • 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
    • ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசியதாவது:-

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறான ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு விவசாயிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டுவதற்கு முன், 50 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே கிணறு, ஆழ்குழாய் கிணறு இருந்தால் அதற்கு இந்த விதி பொருந்துமா? என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் வெட்டுவதற்கு முன் விவசாயம் செய்தவர்களுக்கு இந்த விதியை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்காது என்றனர். அவ்வாறான இணைப்புகளுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பதில் தெரிவிக்கலாம் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

    ×