search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற சபாநாயகர்"

    • குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.
    • புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது. இதனால் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.

    கெவின் மெக்கார்த்தி, ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர்.

    புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சபாநாயகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது. இதற்கிடையே குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் தேர்வுக்கான ஓட்டெப்பில் மைக் ஜான்சன் 220 வாக்குகள் பெற்றார். எதிராக 209 வாக்குகள் விழுந்தது. இதனால் மைக் ஜான்சன், பாராளுமன்ற பிரநிதிநிதிகள் சபை சபாநாயராக வெற்றி பெற்றார்.

    • சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
    • இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×