search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி செல்லா குழந்தைகள்"

    • பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில்லை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன், பள்ளி ஆசிரியை குளோரி, கவுன்சிலர் மோகனா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகளின் விபரத்தை சேகரிக்க சென்றனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பாலாஜி நகர் அருகில் உள்ள கள்ளுக்கடை பகுதியில் வசிக்கும் பழங்குடியினரிடம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர். பின்பு சாக்லேட் கொடுத்து வரவழைத்து பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    • மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிச் செல்லாக் குழந்தை களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளி யில் சேர்ப்பது தொடர்பாக வருகிற 19ம் தேதிமுதல் 11.01.2023 வரை ஆசிரியர், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் குடியிருப்பு வாரியாக பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வும், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தை தொழிலாளராக மாறிய குழந்தைகளை மீட்டெடுத்து அவர்கள் பள்ளிகள் செல்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பல்வேறு துறை யின் களப்பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்திட வும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தங்கள் பஞ்சாயத்து க்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றிடவும், பள்ளி செல்லா குழந்தை களை கண்டறிவதற்கான பள்ளி அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் என 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேத்துப்பட்டு அன்மருதை கிராமத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, கலெக்டர் முருகேஷ், உத்தரவின் பேரில் பள்ளி செல்லா குழந்தைகள், மற்றும் பள்ளி இடை நின்ற மாணவர்களை, கண்டறிந்து அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தலைமையில் வட்டாரவள மேற்பார்வையாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் சரவணன்ராஜ், மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆகியோர் குழுவாக சென்று அன்மருதை, கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள், உள்ளார்களா என்று ஆய்வு செய்தனர்.

    அதுபோல இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் 5 பேர். பள்ளி இடை நின்ற மாணவர்கள் 2 பேரை கண்டறிந்து. அன்மருதை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இவர்களை சேர்த்தனர்.

    புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சீருடைகள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், வாய்ப்பாடு, ஆகியவற்றை வழங்கி, மாணவர்களிடம் கல்வியின் அவசியத்தை கூறி தொடர்ந்து பள்ளிக்கு வர மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய், பட்டதாரி ஆசிரியர்கள் பழனிவேல், வெங்கடேசன், சபிதாதேவி, ஜவகர் தேவநாயகம், வெங்கடாசலம், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இருந்தனர்.

    ×