என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பள்ளி ஆசிரியர் கைது
நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியர் கைது"
தென்காசியில் பள்ளி வேனில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விளையாட்டு ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். தினமும் அந்த சிறுமி காலையில் வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி வருவாள்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்த சிறுமி வேனில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். மாலையில் வேனில் இருந்து இறங்கிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளாள். அந்த சிறுமி இறங்கியவுடன் டிரைவரும் வேனை வேகமாக எடுத்து கொண்டு சென்று விட்டார்.
பின்னர் தாயாருடன் அந்த சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது சிறுமி அழுதாள். பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் வேனில் வரும்போது தனது பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிறுமியை பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தினமும் அந்த சிறுமி பயணிக்கும் வேனில் வழி நெடுகிலும் மற்ற மாணவ-மாணவிகள் இறங்கி கொள்ள, கடைசியாக இந்த சிறுமி மட்டும் தனியாக ஊருக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி ஆசிரியர் இளையராஜா இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இளையராஜா கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த வேனில் கிளீனருக்கு பதிலாக விளையாட்டு ஆசிரியர் சென்றது எப்படி? அவர் அடிக்கடி இதுபோன்று வேனில் சென்று வேறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ஆசிரியர் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பள்ளி ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். தினமும் அந்த சிறுமி காலையில் வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி வருவாள்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்த சிறுமி வேனில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். மாலையில் வேனில் இருந்து இறங்கிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளாள். அந்த சிறுமி இறங்கியவுடன் டிரைவரும் வேனை வேகமாக எடுத்து கொண்டு சென்று விட்டார்.
பின்னர் தாயாருடன் அந்த சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது சிறுமி அழுதாள். பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் வேனில் வரும்போது தனது பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிறுமியை பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தினமும் அந்த சிறுமி பயணிக்கும் வேனில் வழி நெடுகிலும் மற்ற மாணவ-மாணவிகள் இறங்கி கொள்ள, கடைசியாக இந்த சிறுமி மட்டும் தனியாக ஊருக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி ஆசிரியர் இளையராஜா இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இளையராஜா கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த வேனில் கிளீனருக்கு பதிலாக விளையாட்டு ஆசிரியர் சென்றது எப்படி? அவர் அடிக்கடி இதுபோன்று வேனில் சென்று வேறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ஆசிரியர் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பள்ளி ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உவரி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
உவரியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் வினோத் (வயது 21). இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி உவரி போலீசில் அந்த மாணவன் புகார் செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். #KolkataSchool
கொல்கத்தா:
கொல்கத்தா நகரின் தெற்கில் உள்ள தக்கூரியா பகுதியில் சிறுமிகள் மட்டும் பயிலும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுமி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு போக மாட்டேன் என்று அழுது ரகளை செய்து வந்தாள்.
அதற்கான காரணத்தை சமீபத்தில் அறிந்த பெற்றோர் அந்த சிறுமி கூறியதை கேட்டு ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தனர். அப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கடந்த மாதம் 26-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவள் கூறியதை கேட்ட பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.
சிறுமியால் குற்றம்சாட்டப்படும் ஆசிரியரை பணிநீக்கம் செய்வதுடன் அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதானமாக பேசி அவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போக மாட்டோம் என அவர்கள் மறுத்து விட்டனர்.
இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்றுகூட கருதாமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஓரிரு பெண்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.
தடியடிக்கு பின்னர் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். #KolkataSchool
கொல்கத்தா நகரின் தெற்கில் உள்ள தக்கூரியா பகுதியில் சிறுமிகள் மட்டும் பயிலும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுமி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு போக மாட்டேன் என்று அழுது ரகளை செய்து வந்தாள்.
அதற்கான காரணத்தை சமீபத்தில் அறிந்த பெற்றோர் அந்த சிறுமி கூறியதை கேட்டு ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தனர். அப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கடந்த மாதம் 26-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவள் கூறியதை கேட்ட பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.
சிறுமியால் குற்றம்சாட்டப்படும் ஆசிரியரை பணிநீக்கம் செய்வதுடன் அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதானமாக பேசி அவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போக மாட்டோம் என அவர்கள் மறுத்து விட்டனர்.
இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்றுகூட கருதாமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஓரிரு பெண்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.
தடியடிக்கு பின்னர் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். #KolkataSchool
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X