search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் அலைக்கழிப்பு"

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன.
    • ரெயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக தெற்கு ரெயில்வே கடமைப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரெயில், பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வழக்கமாக நிறுத்தப்படும்.

    நேற்று முன்தினம் இரவு, ரெயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர், ராமேசுவரத்துக்கு ஆய்வுக்கு செல்லவிருந்த சிறப்பு ரெயில் 4-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டதால், பாண்டியன் விரைவு ரெயில் 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது.

    இதனால், அந்த ரெயிலில் பயணம் செய்ய வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்குமங்குமாக அலைந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடைக்கு சென்றனர். குறிப்பாக, வயதானவர்கள், கைக்குழந்தையோடு வந்த தாய்மார்கள் எல்லாம் பரிதவித்தனர்.

     இதுகுறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், "ரெயில் நிலைய கட்டுமானப் பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரெயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்துள்ளனர். இதற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன. இதில், முதல் 3 நடைமேடைகள் குறைந்த நீளம் கொண்டவை. 4வது நடைமேடை மட்டுமே நீளம் கொண்டது. அத்துடன், பீக் ஹவர் நேரங்களில் நீண்ட தூர விரைவு ரெயில்களை கையாள்வதற்கு 4-வது நடைமேடை வசதியாக உள்ளது.

    கடந்த 11-ந்தேதி சார்மினார், முத்துநகர் மற்றும் பொதிகை ஆகிய விரைவு ரெயில்கள் மாலை 6 மணி முதல் இரவு 8.40 மணி வரை 4-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டன. எழும்பூருக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும் சோழன் விரைவு ரெயில் தான் மீண்டும் பாண்டியன் விரைவு ரெயிலாக இரவு 9.40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த ரெயில் 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பாண்டியன் விரைவு ரெயில் பல நாட்கள் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே வாரிய உறுப்பினர் செல்வதற்கான சிறப்பு ஆய்வு ரெயில், சென்னை சென்ட்ரலில் இருந்து 8.40 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலைய 4வது நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பாண்டியன் விரைவு ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரமே இருந்ததால் மீண்டும் நடைமேடை மாற்றி நிறுத்தினால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கருதி 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க நிர்வாக காரணம்தான்.

    ரெயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக தெற்கு ரெயில்வே கடமைப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.
    • ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

    மதுரை:

    ரெயில்வே அதிகாரியான ரூப் நாராயண் ஷங்கர் நேற்று மதுரையில் இருந்து வெளியூர் செல்ல பயணம் மேற்கொண்டார். அப்போது

    அவர பயணிக்க வேண்டிய ரெயில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.

    அதிகாரி என்பதால், ரெயில்வே நிர்வாகம் 4ம் பிளாட்பாரத்தில் அவர் பயணிக்க தனி ரெயிலை இயக்கியது. அத்துடன், 5வது பிளாட்பாரத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பயணிகளை 5வது பிளாட்பாரத்துக்கு அலைக்கழித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் உரிய அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில். அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.

    மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×