search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமன ஆணைகள்"

    • முகாமிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
    • 335 பேருக்கு நிறு வனங்கள் சார்பில் பணி நிய மன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

    இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    அதேப்போல் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரானிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021 -22ம் ஆண்டு 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 2022-23 ஆண்டு 24 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என மொத்தம் 38 முகாம்களின் மூலம் மொத்தம் 6,418 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளார்கள்.

    மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினால், தனியார் துறை வேலை இணையத்தின் வாயிலாகவும் வேலைநாடுநர்கள் பதிவு செய்து வேலை பெற வழிவகை செய்யும் இணைப்பு பாலமாக திகழ்கிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த இணையத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 156 தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்து, இதுவரை 1221 வேலைதேடுபவர்கள் இம்மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர். பணியில் சேரும் நீங்கள் நிறுவனங்களின் தேவைக்கேற்ப தனிதிறமைகளை வளர்த்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். நிறுவனங்கள் பணியாளர்களின் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு வழங்கி வருகிறது.

    படித்து முடித்தவுடன் சிறிய வேலை இருந்தாலும் அவற்றில் நீங்கள் பணியாற்றி அவற்றில் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னேறி செல்ல வேண்டும். இங்கு பங்கேற்றுள்ள நிறுவனங்களில் நீங்கள் நல்ல முறையில் நேர்கானலில் பங்குகொண்டு வேலை வாய்ப்பு பெறவேண்டும். எனவே இளைஞர்கள் இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்றைய முகாமில் 2,238 பேர் கலந்து கொண்டனர். அதில் 335 பேருக்கு நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்கு நர்லதா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர் சபீனா பானு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உதவியாளர்கள் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.
    • பணியின் போது எந்த ஒரு சுணக்கமும் தொய்வும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள 25 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி பணி நியமன ஆணைகளை வழங்கி, தொழில்நுட்ப பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 49 ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகள் ரூ.740.330 லட்சம் மதிப்பீட்டிலும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 300.59 கி.மீ நீளமுள்ள 232 சாலைப் பணிகள் ரூ.121.00 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக தரக் கட்டுபாட்டிற்காகவும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் 25 தொழில்நுட்ப உதவியாளர்கள் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.

    மேலும், தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் நுணுக்கங்களை பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைத்து பணியின் போது எந்த ஒரு சுணக்கமும் தொய்வும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் சாந்தி தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் பாலாஜி, காயத்ரி, கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

    • மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

    முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1201 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விதமாக 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட படித்த மற்றும் படிக்காதவர்களும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

    அந்தவகையில், இன்றைய தினம், படிக்காத மற்றும் படித்த வேலை தேடும் இளைஞர்கள், ஆண், பெண் இருபாலரும் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள்வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 52 மாற்றுத்திறனாளிகள் உட்பட 4644 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். பெங்களுர், சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களை சார்ந்த 239 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 15 திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், 1201 நபர்கள் (8 மாற்றுத்திறனாளிகள்) பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, முன்னாள் அமைச்சர்பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம். பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் மா.லட்சுமி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரை ச்செல்வன், திரு.எம்.ஜி.சேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×