search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரில்"

    • இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணியினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கோதையாறு பாசன திட்டத்தின்கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரு கிறது. ரூ.4.80 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் நீளத்தில் அனந்தன்குளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை'அ' கிராமம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.8.50 லட்சம் மதிப்பில் 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆசாரி பள்ளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், வேம்பனூர் கிழக்கு, நீண்டகரை அ, மற்றும் கல்குளம் வட்டம் ஆளுர் 'ஆ' கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    ரூ.11.51 லட்சம் மதிப்பில் 5.60 கிலோ மீட்டர் நீளத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை அ, வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 3.60 கிலோ மீட்டர் நீளத்தில் தெங்கம்புதூர் கால்வாய்க்குட்பட்ட மதுசூதனபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கால்வாய்களை முறையாக தூர்வாருவதால் கால்வாயின் நீர்ப்போக்கு கொள்ளளவு அதிகரிக்கும். கால்வாயில் வரும் தண்ணீர் இழப்பு ஏற்படாமல் கடை வரம்பு பகுதிகளில் உள்ள பாசன பகுதிகளுக்கு வெள் ளப்பெருக்கு காலங்களில், சென்றடையும் கால்வாய் களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல் லாமல் பாதுகாக்க இயலும். மேலும் இக்கால்வாய்களின் வாயிலாக 2246.61 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • குமாரபாளையம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறார்கள்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார், உமேஷ் பூபாலன் ஆகியோர் நேற்று நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது வந்துள்ள நோய் ஒருவகை வைரஸ் நோய், அம்மை வகையை சேர்ந்தது. தடுப்பூசியால் நோய் குணமாகி, வட்டமான தடிப்பு மறைந்து விடும். இல்லாவிடில் அது காய்ந்து தானே விழுந்து விடும். கால்நடைகளுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் சென்று நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டு வருகிறோம்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறோம். கால்நடைகள் வளர்ப்போர் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×