search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்கொள்முதல் நிலையம்"

    • உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
    • வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டில் கல்லாபுரம், ராமகுளம் ராஜ வாய்க்கால் பாசனத்தில் மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில் 3,200 ஏக்கரில் நெல்நடவு செய்துள்ளனர்.இப்பகுதிகளில் பழைய ஆயக்கட்டுகால்வாய்கள் தூர்வாரும் பணி தாமதமாக துவங்கியதால் சாகுபடி பணிகளும் தாமதமானது.தற்போது இரண்டாம் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமராவதி, பூச்சிமேடு, கல்லாபுரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.தொடர்ந்து பூளவாடி, வேல்நகர், மாவளம்பாறை பகுதிகளில் இம்மாத இறுதியில் அறுவடை பணி துவங்க வாய்ப்புள்ளது.

    நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ருத்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் துவக்கி கால நீடிப்பு வழங்கவும், தேவையான அறுவடை எந்திரங்கள் கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசன பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. ஒரு மாதம் வரை அறுவடை நீடிக்கும்.நிலையிலுள்ள நெற் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும். அறுவடைக்கு தேவையான எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை காயவைக்க போதிய உலர்கள வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வசதியில்லாததால் ஒவ்வொரு சீசனிலும் சிரமப்படுகிறோம்.கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் ருத்ராபாளையத்தில் துவக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன் மூடப்பட்டது.

    வெளி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அரசு கொள்முதல் மையத்தில் 2,160 ரூபாய் வழங்கப்படுகிறது.தற்போது அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் மீண்டும் செயல்படும் வகையில் கால நீடிப்பு செய்ய வேண்டும் என்றனர்.  

    • இடைக்காட்டூர் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு கடந்தாண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடை களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.

    இந்தாண்டு மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிறுகுடி, பெரிய கோட்டை, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம், செட்டி குளம், தெக்கூர், காளிபட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டு நெல் அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்கா ங்கே விவசாயிகள் இறக்கி அடுக்கி வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நெல் மூடைகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனி வரும் நெல்லை பாதுகாக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் விவசாயிகள் இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் உடனடியாக இடைகாட்டூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து உடனடியாக நேற்று இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையங்களில், வைரிசெட்டிப்பாளையம் 40 டன், கோட்டப்பாளையம் 80 டன், பி.மேட்டூர் 80 டன், புளியஞ்சோலை 40 டன், ஆலத்துடையான்பட்டி 40 டன், எரகுடி தெற்கு 40 டன், வடக்கு 40 டன் என நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    7 மையங்களின் வாயிலாக 40 கிலோ சிப்பங்களாக 9000 சிப்பங்கள், நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், நெல் வரத்து அதிகரிப்பு காரணமாக, மாவட்ட நிர்வாகம் சிறுநாவலூரில் மையத்தை திறக்க அனுமதி வழங்கியது. சில மையங்களில் நெல் தேங்கியுள்ள நிலையில், கொள்முதல் திறனை அதிகரித்து, நிலைமையை சீரமைக்க, சிறுநாவலூரில் 8 வது நெல் கொள்முதல் மையம் துவக்கி வைக்கப்பட்டதன் மூலம் உப்பிலியபுரம் பகுதியில் நெல் கொள்முதல் திறன் நாளொன்றுக்கு 400 டன் என அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    துவக்க விழாவில், உப்பிலியபுரம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாமுத்துசெல்வன், திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், நகரசெயலாளர் வெள்ளையன், முன்னாள் தலைவர் சூர்யகலாஇளங்கோவன், சிறுநாவலூர் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், உதவிதலைவர் பாஸ்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×