search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து வினாடிக்கு"

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் இந்த அணையின் மூலம் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அதே நேரம் பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2317 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை விட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்ட மும் உயர தொடங்கி உள்ளது.

    • மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நேற்று பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி யாக இன்று பவானி சாகர் அணைக்கு மேலும் வினாடிக்கு 6,659 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 955 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.50 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது.

    33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.49 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாவனிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடி எட்டியதால் அணை யில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டது. இதையடுத்து மழை குறைந்த தால் அணைக்கு வரும் நீர் குறைந்தது.

    இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவ தால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விட ப்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று 9500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

    மேலும் அணையில் இருந்து 9500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப் பரித்து செல்கிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து காளிங்க ராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க் காலுக்கு 1750 கனஅடியும், ஆற்றில் 7450 கனஅடி தண்ணீர் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    தண்ணீர் அதிகம் திறப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணையில் இருந்து அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

    இதையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்திலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×