என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்பயா"

    • உச்ச நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீதி கிடைக்கும்
    • குல்தீப் சிங் செங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் மரணமடைந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    செங்காரின் மேல்முறையீட்டு மனுவை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவால் தான் நிம்மதி அடைந்துள்ளதாகவும், எட்டு ஆண்டுகளாக நீதி கிடைக்கப் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பாக பேசிய அவர்,

     "இன்று நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன். நீதிபதி தீர்ப்பளித்தபோது நான் நீதிமன்றத்தில் இருந்தேன். இந்தத் தீர்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விசாரணையை 3 மாதங்களுக்குள் விரைவில் முடிக்க நீதிபதி உத்தரவிட்டதில் நான் திருப்தி அடைகிறேன். என் தந்தை திரும்பி வரப்போவதில்லை. குல்தீப் செங்காரின் சகோதரர்கள் அதுல் சிங் செங்கார் மற்றும் ஜெய்தீப் சிங் செங்கார் ஆகியோர் என் தந்தையைக் கொன்றனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வெளியே உள்ளனர். குல்தீப் சிங் செங்காரைப் பொறுத்தவரை, அவர் எனக்கு எதிராக ஒரு கொடூரமான செயலைச் செய்துள்ளார். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அதை எப்படி நிரூபிக்க முடியும்? நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்காக அதை செய்யவேண்டுமா?

    நானும் நிர்பயா மாதிரி இறந்திருந்தால், நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்று எல்லோரும் நம்பியிருப்பார்கள். நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு என்ன நடந்தது என்பதை நிரூபிக்க பல வருடங்கள் ஆனது. நான் 8 வருடங்களாக போராடி வருகிறேன். இப்போதும் கூட, நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    அவரது மகள் இது ஒரு சாதாரண விபத்து என்று கூறினார். விபத்து சாதாரணமானதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் வென்டிலேட்டரில் இருந்தேன். என் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்துள்ளேன். என் தந்தையின் ஆன்மா சாந்தியடையவும், அவருக்கு நீதி கிடைக்கவும் குல்தீப் செங்காரை தூக்கிலிட வேண்டும்." என தெரிவித்துள்ளார். 

    மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. #NirbhayaVerdict
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #NirbhayaVerdict 
    ×