search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தி சிலை இல்லை"

    • பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
    • சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.

    ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.

    ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.

    பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.

    தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.


    ×