search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு பெற்றோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    புவனேஸ்வர்:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு(34) என்பவர் அப்பகுதியில் கடந்த 30-10-2018 அன்று துணை ராணுவப் படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் நகரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடி இங்கு அச்சுத்யானந்த் சாஹுவிப் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. 

    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ராஜிவ் குமார் சிங்(37) என்பவர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்திய ரிசர்வ் படையின் 148-வது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த ராஜிவ் குமார் சிங், தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கபிர் நகர் காவல் நிலையத்துக்குள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    பலியான ராஜிவ் குமார் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம், சன்டவுலி மாவட்டம், ஜமுனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #CRPFjawan  #jawanshootsself  #ChhattisgarhCRPFjawan
    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடந்த சுக்மா மாவட்டத்தில் 7 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Naxalsgunneddown #NaxalsinChhattisgarh #NaxalsinSukma
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

    தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
     
    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில்  பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதேபோல், தேர்தலை சந்தித்த சுக்மா மாவட்டத்தில் உள்ள முட்வால் கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் இன்று மாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் இரு நக்சலைட்களை ஆயுதப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

    இரு நக்சலைட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடன் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் மீனா தெரிவித்தார். #Naxalsgunneddown #NaxalsinChhattisgarh #NaxalsinSukma 
    சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் 5 நக்சலைட்கள் கோப்ரா படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #Chhattisgarhencounter #fiveNaxalsdead #Bijapurencounter
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
     
    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும், இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில்  பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    கமாண்டோ படையை சேர்ந்த இரு வீரர்களும், கோப்ரா படையை சேர்ந்த மூன்று வீரர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். #Chhattisgarhencounter  #fiveNaxalsdead #Bijapurencounter 
    சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 4 பேர் வீர மரணம் அடைந்தனர். #FourCRPFpersonnel #Naxalsblowup #ChhattisgarhNaxals
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நவம்பர் 12-ம் தேதியும், வடக்கு பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள தொகுதிகளில் முதல் மந்திரி ரமன் சிங் இன்று பிரசாரத்தை தொடங்கி வைத்தார். 

    இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் அவாப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற ரோந்து வாகனத்தின்மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர்.

    முர்டான்டா முகாம் அருகே இன்று மாலை 4 மணியளவில் நடந்த இந்த கண்ணிவெடி தாக்குதலில்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர் மற்றும் இரு காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். #FourCRPFpersonnel #Naxalsblowup #ChhattisgarhNaxals
    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Naxalsgunneddown #ChhattisgarhNaxals
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் பிஜப்பூர் மாவட்டம், மடப்பல் கிராமம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, தலைநகர் ரார்ப்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த காட்டுப் பகுதிக்கு சிறப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை சுமார் 9 மணியளவில் காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்கள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    சம்பவ இடத்தில் இருந்து, கைத்துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் நக்சலைட் இயக்கம் தொடர்பான சில புத்தகங்கள் ஆகியவற்றை சிறப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.  #Naxalsgunneddown #ChhattisgarhNaxals
    ×