search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடரும் வழிப்பறி"

    • ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள், சமூக விரோத கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், பூட்டியிருக்கும் வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் மர்ம கும்பல் நகை பறிப்பில் துணிச்சலாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    நேற்றும்கூட பட்டம்புதூரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி முருகேசன் என்பவர் தனது மனைவி ஜீவராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஅவரை மறித்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நகை-பணத்தை பறி கொடுத்து போலீஸ் நிலையங்களில் அைலந்து வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் சாத்தூரில் 54 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக சாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

    போலீசாரின் மெத்தன நடவடிக்கையால் சமூக விரோத கும்பல் துணிச்சலாக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    இதுதவிர மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, ரேசன் அரிசி கடத்தல் போன்றவையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    ×