search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு ஊழியர் பலி"

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சிவகாமி மீது மோதியது.
    • லாரி அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சிவகாமி(வயது37). துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பு அருகே தூய்மை பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவ்வழியாக ஐ.டி. நிறுவனத்தில், பணிபுரிந்து வரும் மவுலிவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஸ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சிவகாமி மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

    அந்த நேரத்தில் பின்னால் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சென்ற சரக்கு லாரி சிவகாமியின் தலை மீது ஏறி இறங்கியது.

    மேலும் அந்த லாரி அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் துப்புரவு ஊழியர் சிவகாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்ததும் திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து பலியான சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக அஸ்வந்திடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
    • நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை அவர் வழக்கம் போல் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3-வது மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள குப்பை தொட்டி அருகே தரையில் சரிவர புதைக்கப்படாமல் இருந்த மின் கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. இதனை கவனிக்காமல் சேகர் அதன் மீது கால் வைத்து குப்பைகளை அகற்ற முயன்றார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் வயர்கள் சரி செய்யப்பட்டது.

    நேற்று இரவு அப்பகுதியில் பரவலாக மழை பெய்து இருந்தது. மழை நீரின் ஈரத்தால் சரியாக புதைக்கப்படாத மின் கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம் தொழிலாளி சேகரின் உயிரை பறித்து விட்டது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதே போல் ஆபத்தாக உள்ள மின் வயர்களை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது. இதனை பார்த்து அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கசிவை சரிசெய்தனர். மின்சாரம் தாக்கி இறந்த மாடு சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மின்இணைப்பு பெட்டி அருகே தரையில் இருந்து வெளியே தெரியும் வகையில் உள்ள மின் வயர்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×