search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பு"

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



    சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
    பஞ்சாப் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #AmritsarBlast
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நேற்று மதபோதனை நிகழ்ச்சி நடைபெற்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



    இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று அறிவித்துள்ளார். பஞ்சாப் போலீஸ் ஹெல்ப்லைன் 181-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    தாக்குதல் நடந்த பகுதியில் முதல்வர் இன்று நேரில் பார்வையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். #AmritsarBlast

    ×